சென்னை:
தமிழகத்தில் அடுத்த மாதம் 23-ந்தேதி சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நாளை மறுநாள் (30-ந்தேதி) தொடங்குகிறது. இதனால் சட்டசபை தேர்தல் களம் விறுவிறுப்படைந்து உள்ளது.
தி.மு.க., அ.தி.மு.க., தமிழக வெற்றிக்கழகம், நாம் தமிழர் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுமே தேர்தல் பணிகளை முடுக்கி விட்டுள்ளன.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இந்த தேர்தலில் தனித்து போட்டியிடுகிறது. 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்துகிறது.
விருப்பமனு கொடுத்தவர்களிடம் கட்சி தலைவர் விஜய் நேர்காணல் நடத்தி வேட்பாளர்களை தேர்வு செய்தார். அதன் அடிப்படையில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.