• Mon. Aug 17th, 2026

24×7 Live News

Apdin News

24 ஆண்டுகளாக கிடைக்காத அம்மா உடல்: தாயின் உடல் கண்டுபிடிக்கப்படும் வரை தந்தையை விடுதலை செய்யக்கூடாது என கோரும் குழந்தைகள்

Byadmin

Aug 17, 2026


லிண்டா தனது நான்கு குழந்தைகளில் இருவரை பள்ளிக்குப் பிறகு நடைபெறும் செயல்பாடுகள் மையத்திலிருந்து அழைத்துச் செல்ல வராதபோதுதான், அவர் காணாமல் போனது குடும்பத்தினருக்குத் தெரியவந்தது.

பட மூலாதாரம், Family photo

படக்குறிப்பு, லிண்டா தனது நான்கு குழந்தைகளில் இருவரை பள்ளிக்குப் பிறகு நடைபெறும் செயல்பாடுகள் மையத்திலிருந்து அழைத்துச் செல்ல வராதபோதுதான், அவர் காணாமல் போனது குடும்பத்தினருக்குத் தெரியவந்தது.

    • எழுதியவர், வில் க்ளென்னன்
    • எழுதியவர், மேடலின் வேர்

    • எழுதியவர், சாரா டர்னிட்ஜ்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

“அவரது உடலை முறையாக அடக்கம் செய்து, அவர் பெற வேண்டிய மரியாதையை வழங்க வேண்டும். இறுதியாக, ‘முடிந்துவிட்டது’ என்று எங்களால் சொல்லும் நிலை வர வேண்டும்.”

கேட் ரஸல் தனது தாயார் லிண்டா குறித்து இவ்வாறு பேசுகிறார். கேட் 13 வயதாக இருந்தபோது, 2002-ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஸ்விண்டனில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்தபோது லிண்டா காணாமல் போனார்.

அப்போது, லிண்டா கேட்டின் தந்தையான கிளின் ரஸலிடம் இருந்து விவாகரத்து பெறும் நடவடிக்கையில் இருந்தார். பின்னர், லிண்டாவைக் கொலை செய்த குற்றத்திற்காக கிளின் ரஸல் குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு, ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

லிண்டாவுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அவர் இதுவரை எந்தத் தகவலையும் தெரிவிக்கவில்லை. அவரது உடலும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

சுமார் கால் நூற்றாண்டாக, அவரது குடும்பத்தினர் எந்தப் பதிலும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர். லிண்டாவின் மறைவுக்காக உரிய முறையில் துக்கம் அனுசரிக்கவோ, இறுதிச் சடங்கு நடத்தவோ அவர்களால் முடியவில்லை.

By admin