• Sun. Aug 17th, 2025

24×7 Live News

Apdin News

“2800 நாய்களைக் கொன்றுவிட்டேன்” – தெரு நாய் பிரச்னைக்கு தீர்வு கோரும் அரசியல் தலைவர்

Byadmin

Aug 16, 2025


எஸ்.எல். போஜேகெளவுடா, மைசூர் பல்கலைக்கழகம், பெங்களூரு பல்கலைக்கழகம்

பட மூலாதாரம், Karnataka Assembly

படக்குறிப்பு, எஸ்.எல். போஜேகெளடா மைசூர் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி பட்டமும், பெங்களூரு பல்கலைக்கழகத்தில் எல்.எல்.பி பட்டமும் பெற்றுள்ளார்

கர்நாடக சட்ட மேலவை உறுப்பினரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவருமான எஸ்.எல். போஜேகெளடா, ‘சுமார் 2800 நாய்களைக் கொன்றேன்’ எனக் கூறியுள்ளார்.

புதன்கிழமை சட்டப் பேரவை நடவடிக்கைகளின் போது போஜேகெளடா இந்தக் கூற்றை முன்வைத்தார்.

சமீபத்திய உச்ச நீதிமன்ற உத்தரவை ஆதரித்த போஜேகெளடா, தெருநாய்களால் கடிக்கப்பட்ட குழந்தைகளின் வலியை பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமே புரிந்துகொள்ள முடியும் என்றார்.

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுற்றித் திரியும் தெருநாய்களை அகற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சந்தர்ப்பத்தில் போஜேகெளடாவின் கருத்து வெளிவந்துள்ளது.

By admin