• Sat. Sep 20th, 2025

24×7 Live News

Apdin News

3 ஆயிரம் கலைஞர்களுடன் சமையல் போட்டி திருவிழா: அமைச்சர் ராஜேந்திரன் தொடங்கி வைத்தார் | Minister Rajendran inaugurates cooking competition festival with 3000 artists

Byadmin

Sep 20, 2025


சென்னை: சென்​னை​யில் 3 ஆயிரம் சமையல் கலைஞர்​கள் பங்​கேற்ற, சமையல் போட்டி திரு​விழா விமரிசை​யாக தொடங்​கியது. இதை, அமைச்​சர் ஆர்​.​ராஜேந்​திரன் தொடங்கி வைத்​தார். இந்​திய வர்த்தக மேம்​பாட்டு அமைப்பு மற்​றும் தமிழ்​நாடு வர்த்தக மேம்​பாட்டு அமைப்​பின் சார்​பில், ஆஹார் உணவு மற்​றும் விருந்​தோம்​பல் கண்​காட்சி சென்னை நந்​தம்​பாக்​கத்​தில் நேற்று தொடங்​கியது.

இதன் ஒரு பகு​தி​யாக நடை​பெற்ற தென்​னிந்​திய சமையல்​கலை வல்​லுநர்​கள் சங்​கத்​தின் (சி​கா), 7-வது ‘கலினரி ஒலிம்​பி​யாட்’ சமையல் போட்டி திரு​விழா மற்​றும் கண்​காட்​சியை தமிழக சுற்​றுலாத்துறை அமைச்​சர் ஆர்​.​ராஜேந்​திரன் தொடங்கி வைத்​தார். 3 நாட்​கள் நடை​பெறும் போட்​டிகளுக்​கான கோப்​பையை சங்​கத்​தின் தலை​வர் கே.​தாமோதரன் வெளி​யிட்​டார்.

பல்வேறு சமையல் போட்டிகள்: இது உலக சமையல்​கலை வல்​லுநர்​கள் சங்​கத்​தால் அங்​கீகரிக்​கப்​பட்டு நடத்​தப்​படும் இந்​தி​யா​வின் முதல் தேசிய சமையல் போட்​டி​யாகும். இதில், தென்​னிந்​தி​யாவை சேர்ந்த சமையல் நிறு​வனங்​கள், ஹோட்​டல்​கள், பார்​கள் உள்ளிட்ட நிறு​வனங்​களில் இருந்து மூத்த மற்​றும் பயிற்சி பெற்ற சமையல் கலைஞர்​கள், மாணவர்​கள் என 3 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் பங்​கேற்று நேரடி சமையல் போட்​டிகள், காக்​டெய்ல், மாக்​டெய்ல் போட்​டிகள், விருந்​தோம்​பல் மீது கவனம் செலுத்​தும் பராமரிப்பு நிபுணர்​களுக்கான போட்​டிகளில் தங்​களது திறமை​களை வெளிப்​படுத்தினர்.

முதல் நாளான நேற்​று, மூன்று அடுக்கு திருமண கேக்​கு​கள், வெண்​ணெய்​யில் தயாரிக்​கப்​பட்ட சிற்​பங்​கள், நறுமணப் பொருட்​களுக்​கான போட்​டிகள் ஒரு தொகு​தி​யிலும், சமையல் குழுக்​களுக்​கான பஃபே ஒரு தொகு​தி​யிலும், நேரடி படைப்பு திறன் பிரி​வில் பரோட்​டா, உணவகங்​களின் சிறந்த தயாரிப்​பு​கள், அசல் பாரம்​பரிய உணவு​கள் ஒரு தொகு​தி​யிலும் காட்​சிப்​படுத்​தப்​பட்​டிருந்​தன. இதில் வெண்​ணெய்​யில் செய்​யப்​பட்ட சிற்​பங்​கள் காண்​போரை வெகு​வாக கவர்ந்​தன. இந்த போட்​டிகளில் மாலத்​தீவு, மொரீஷியஸ், இலங்​கை, ஆஸ்​திரேலி​யா, வியட்​நாம் போன்ற நாடு​களைச் சேர்ந்த சமையல் கலைஞர்​கள் பங்​கேற்​றிருந்​ததும் குறிப்​பிடத்​தக்​கது.

போட்​டியை தொடங்கி வைத்து அமைச்​சர் ஆர்​.​ராஜேந்​திரன் பேசும்போது, “தென்​னிந்​திய சமையல்​கலை வல்​லுநர்​கள் சங்​க​மானது சமையல் நிபுணர்​களின் லாப நோக்​கமற்ற தன்​னார்​வலர்​களை கொண்ட ஓர் அமைப்​பாகும். தமிழகத்​தில் சர்​வ​தேச அளவில் விருந்​தோம்​பல் மற்​றும் சமையல் கலை​யின் தரத்தை மேலும் உயர்த்​தும் வித​மாக, உலகெங்​கிலும் உள்ள சமையல்​கலை நிபுணர்​களின் உச்ச அமைப்​பான உலக சமையல்​கலை வல்​லுநர்​களு​டன் இந்த அமைப்பு இணைந்​திருப்​பது சிறப்​பானது.

இந்த போட்​டிகள் உலகெங்​கும் உள்ள சமையல் கலைஞர்​களின் திறமை​களை பறை​சாற்​றும்” என்று தெரி​வித்​தார். இந்​நிகழ்​வில், தென்​னிந்​திய சமையல்​கலை வல்​லுநர்​கள் சங்​கத்​தின் பொதுச்​செய​லா​ளர் என்​.சீ​தா​ராம் பிர​சாத், இந்​தி​யா​வின் சமையல்​கலை வல்​லுநர் சஞ்​சீவ் கபூர், இந்​திய சமையல் சங்​கங்​களின் கூட்​டமைப்பு தலை​வர் மஞ்​சித் சிங் கில், பொதுச்​செய​லா​ளர் வி.​விஜய பாஸ்​கரன், இந்​திய வர்த்தக மேம்​பாட்டு அமைப்​பின் தலை​வர் பிரதீப் சிங், ஆச்சி மசாலா குழு​மத்​தின் நிறு​வனர் ஏ.டி.பத்​மசிங் ஐசக் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.



By admin