• Thu. Apr 24th, 2025

24×7 Live News

Apdin News

36 ஆண்டுகளாக தொடரும் உத்தபுரம் தலித் மக்கள் போராட்டம் – நீதிமன்றம் உத்தரவிட்டும் கோவில் பூட்டப்பட்டது ஏன்?

Byadmin

Apr 24, 2025


கோவில்

அனைத்து சமூகத்தினருக்கும் வழிபாடு நடத்த சம உரிமை உண்டு என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும், உத்தபுரம் தலித் மக்களால் அந்தப் பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோவில் திருவிழாவில் பங்கேற்க முடியவில்லை. பத்து ஆண்டுகள் சட்டப் போராட்டத்திற்குப் பிறகு, திருவிழா கண்ட முத்தாலம்மன் கோவில் மாவட்ட நிர்வாகத்தால் மீண்டும் பூட்டப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் உள்ள உத்தபுரம் கிராமம், சாதிய தீண்டாமைச் சுவருக்கு எதிரான போராட்டத்தால் அறியப்பட்டது. பல ஆண்டுகளாகவே கடுமையான தீண்டாமையை எதிர்கொண்டு வரும் அந்தப் பகுதியின் தலித் மக்களுக்கு, 1989ஆம் ஆண்டு முதல் அங்குள்ள முத்தாலம்மன் கோவிலில் வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அந்தக் கோவிலில் அனைத்து சமூகத்தினரும் வழிபட சம உரிமை உண்டு என்று கடந்த ஏப்ரல் 21ஆம் தேதி தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பின் அடிப்படையில், செவ்வாய்க்கிழமை உத்தபுரம் கோவிலில் தலித் மக்கள் வழிபாடு நடத்தினர். இருப்பினும், இந்த மாற்றம் இயல்பாக ஏற்கப்படவில்லை. தற்போது கோவில் திருவிழா நடக்கும் நிலையில், அதில் சமமாகப் பங்கேற்கும் உரிமை மறுக்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு மாவட்ட நிர்வாகப் பேச்சுவார்த்தையின் விளைவாக தலித் மக்கள் கோவிலுக்குள் நுழைந்தனர். ஆனால் இதற்கு எதிரான தரப்பினர் கோபமடைந்தனர். அதனால் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக சாதி இந்துக்கள் 2014ஆம் ஆண்டு கோவிலைப் பூட்டி வழிபாட்டை முற்றிலும் நிறுத்திவிட்டனர். இதை எதிர்த்துத் தொடுக்கப்பட்ட வழக்கில்தான் தற்போது அனைவருக்கும் சமமான வழிபாட்டு உரிமை உண்டு என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

By admin