• Sat. Nov 15th, 2025

24×7 Live News

Apdin News

45 கோடி இந்தியர்களுக்கு அடுத்த 25 ஆண்டுகளில் சக்கரை ஏற்படுத்தப்போகும் ஆபத்து

Byadmin

Nov 15, 2025


சர்க்கரையில் மறைந்திருக்கும் ஆபத்து

பட மூலாதாரம், Getty Images

ஒவ்வொருவரும் தாங்கள் எடுத்துக்கொள்ளும் சர்க்கரையின் அளவைக் கண்காணிப்பது முக்கியம். நீங்கள் உணர்வதை விட அதிகமாகச் சாப்பிட்டுக் கொண்டிருக்கலாம். அதிக சர்க்கரையை உட்கொள்வது உங்களுக்கு டைப் 2 நீரிழிவு நோய், இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை மிக அதிகமாக அதிகரிக்கிறது.

கடந்த சில தசாப்தங்களாக உலகெங்கிலும் உள்ள உணவுப் பழக்கவழக்கங்கள் அடிப்படையில் மாறியுள்ளன.

இதற்கு ஏற்ப உடல் பருமன் மற்றும் நீரிழிவு நோயின் விகிதங்கள் விண்ணைமுட்டும் அளவிற்கு அதிகரித்து வருகின்றன.

லான்செட் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2050-க்குள் உலகெங்கிலும் உள்ள அனைத்து பெரியவர்களில் பாதிக்கும் மேலானவர்களும் மற்றும் குழந்தைகள், பதின்ம வயதினர் மற்றும் இளம் வயதினரில் மூன்றில் ஒரு பகுதியினரும் அதிக எடை அல்லது பருமனாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.

நமது எடையை நிர்வகிப்பதில் நாம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவால்களில் ஒன்று, ரொட்டி, சாலட் டிரஸ்ஸிங் முதல் கெட்ச்அப் மற்றும் ஸ்மூத்திகள் வரை – சாதாரண உணவுப் பொருட்களில் நிறைய சர்க்கரை மறைமுகமாக நுழைந்துள்ளது.

By admin