இதையடுத்து, 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் பொறுப்புடன் ஆடி அரை சதம் கடந்தனர்.
பிரியான்ஷ் ஆர்யா 57 ரன்னும், பிரப்சிம்ரன் சிங் 51 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
தொடர்ந்து இறங்கிய கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் அதிரடியாக ஆடி அரை சதம் கடந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஷ்ரேயாஸ் 69 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஐதராபாத் அணி நடப்பு தொடரில் பெறும் 3வது தோல்வி இதுவாகும்.