0
இந்தியாவின் தெலுங்கானாவில் நடைபெற்ற 72ஆவது உலக அழகி போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்குபற்றிய அனுதி குணசேகர இன்று திங்கட்கிழமை (02) நாடு திரும்பினார்.
அனுதி குணசேகர இன்று பிற்பகல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
72ஆவது உலக அழகி போட்டியின் சுற்றுத் தெரிவுகள் மே 10 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டன.
108 நாடுகளைச் சேர்ந்த அழகு ராணிகள் கிரீடத்தை வெல்வதற்காக இந்த போட்டியில் பங்குபற்றினர்.
இந்த போட்டியின் இறுதிச் சுற்று இந்தியாவின் தெலுங்கானாவின் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஹைடெக்ஸ் (HITEX ) அரங்கில் மே மாதம் 31 ஆம் திகதி நடைபெற்றது.
இந்த போட்டியில் இலங்கையைச் சேர்ந்த அனுதி குணசேகர என்பவரும் பங்குபற்றியிருந்தார். அனுதி குணசேகர அநுராதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதுடைய பட்டதாரி ஆவார்.
அனுதி குணசேகரவுடன் 40 அழகு ராணிகள் உலக அழகி போட்டியின் இறுதிச் சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில், 2025 ஆம் ஆண்டுக்கான உலக அழகியாக தாய்லாந்தைச் சேர்ந்த ஓபல் சுசதா சாங்ஸ்ரி (Opal Suchata Chuangsri ) முடி சூட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.