• Wed. Sep 24th, 2025

24×7 Live News

Apdin News

72 வயதில் பாலிடெக்னிக் படிக்கும் கடலூர் முதியவர் – இடம் கிடைத்தது எப்படி?

Byadmin

Sep 24, 2025


72 வயதில் பாலிடெக்னிக் படிக்கும் கடலூர் முதியவர் செல்வமணி
படக்குறிப்பு, சக மாணவர்களுடன் செல்வமணி

“என்னிடம் யாராவது, ‘என்ன படித்தாய்?’ எனக் கேட்கும்போது பத்தாம் வகுப்பில் பாதியிலேயே வெளியேறிவிட்டதாகக் கூறுவது சங்கடத்தை ஏற்படுத்தியது. அதை சரிசெய்யவே பி.காம், எம்.காம், எம்.பி.ஏ ஆகிய படிப்புகளை முடித்தேன்” என்கிறார், கடலூர் மாவட்டம் வடலூரில் வசிக்கும் 72 வயது முதியவரான செல்வமணி.

நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் எலக்ட்ரிகல் பிரிவில் சுமார் 35 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தற்போது சீர்காழியில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு மின்னியல் படித்து வருகிறார்.

“அறிவை மேம்படுத்திக் கொள்ளவே படிப்பில் தொடர்ந்து ஆர்வம் செலுத்துகிறேன்” எனவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுகாவில் உள்ள புத்தூரில் சீனிவாசா சுப்பராயா அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியில் அரியலூர், ஜெயங்கொண்டம், நாகப்பட்டினம் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1300 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

By admin