• Sun. Jun 15th, 2025

24×7 Live News

Apdin News

‘8 காவல் எல்லைகளை தாண்டி பயணித்த அரிவாள்’ – தனியாக வசித்த மூதாட்டி கொலையில் திடுக்கிடும் திருப்பம்

Byadmin

Jun 12, 2025


நாமக்கல்: பண்ணை வீட்டில் மூதாட்டி கொலை - ரத்த வெள்ளத்தில் உதவி கேட்ட சாமியாத்தாள் என்ன ஆனார்?
படக்குறிப்பு, நள்ளிரவில் வீட்டினுள் நுழைந்த மர்ம நபர்கள் சாமியாத்தாளை ஆயுதங்களால் தாக்கிவிட்டுத் தலைமறைவாகிவிட்டனர்

நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர் அருகே உள்ளது சித்தன்பூண்டி கிராமம். இங்குள்ள கொளத்துப்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்தவர் சாமியாத்தாள் (64). இவரது கணவர் ராசப்பன் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார்.

இவருக்கு கிருஷ்ணமூர்த்தி என்ற மகனும், கிருஷ்ணவேணி (எ) சங்கீதா என்ற மகளும் உள்ளனர்.

இருவருக்கும் திருமணமாகி விட்டது. மகன் மனைவியுடன், கோயம்புத்தூரிலும், மகள் அருகிலுள்ள மணியனூர் என்ற ஊரிலும் வசித்து வருகின்றனர்.

நள்ளிரவில் நுழைந்த மர்ம நபர்கள்

நாமக்கல் மாவட்டம், சோழசிரமணி என்ற ஊரில் இருந்து மணியனூர் செல்லும் வழியில் கொளத்துப்பாளையம் என்ற ஊர் அமைந்துள்ளது. ஊரிலிருந்து, நூறு மீட்டர் தொலைவில், தென்னந்தோப்புக்குள் அமைந்துள்ள தனி வீட்டில் சாமியாத்தாள் வசித்து வந்தார்.

By admin