• Sun. Nov 9th, 2025

24×7 Live News

Apdin News

ChatGPT, Gemini: இந்தியாவில் லட்சக்கணக்கான பயனர்களுக்கு ஏஐ கருவிகளை இலவசமாக தருவது ஏன்?

Byadmin

Nov 9, 2025


இலவச ஏஐ கருவிகள் - இந்தியா

பட மூலாதாரம், Future Publishing via Getty Images

படக்குறிப்பு, செயற்கை நுண்ணறிவு நிறுவனங்கள், இந்திய நிறுவனங்களுடன் இணைந்து இலவசமாக அல்லது தள்ளுபடி விலையில் சேவைகளை வழங்குகின்றன.

சாட்ஜிபிடி (ChatGPT)-யின் புதிய மலிவு விலை “கோ” ஏஐ சாட்பாட் (Go AI Chatbot) கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு இந்த வாரம் முதல் ஓராண்டுக்கு இலவசமாக கிடைக்கப் போகிறது.

சமீப வாரங்களில் கூகுள் மற்றும் பெர்ப்ளெக்சிட்டி ஏஐ (Perplexity AI) ஆகியவற்றின் இதேபோன்ற அறிவிப்புகளைத் தொடர்ந்து சாட்ஜிபிடி-யின் அறிவிப்பு வந்திருக்கிறது. இந்நிறுவனங்கள் இந்தியாவின் உள்ளூர் மொபைல் நிறுவனங்களுடன் இணைந்து, பயனர்களுக்கு தங்களின் ஏஐ கருவிகளை ஒரு வருடமோ அல்லது அதற்கும் மேலாகவோ இலவசமாகப் பயன்படுத்தும் வசதியை வழங்கியுள்ளன.

பெர்ப்ளெக்சிட்டி நிறுவனம், நாட்டின் இரண்டாவது பெரிய மொபைல் நெட்வொர்க்கான ஏர்டெல்லுடன் இணைந்து சேவை வழங்குகிறது. அதேசமயம், கூகுள் நிறுவனம் இந்தியாவின் மிகப் பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவுடன் இணைந்து, மாதாந்திர டேட்டா பேக்குகளுடன் இலவசமாகவோ தள்ளுபடி விலையிலோ ஏஐ கருவிகளை வழங்குகிறது.

இவையெல்லாம் இந்தியாவின் நீண்ட கால டிஜிட்டல் எதிர்காலத்தைக் கணக்கிட்டு செய்யப்படும் முதலீடுகள் என்று சொல்லும் ஆய்வாளர்கள், இதைப் பெருந்தன்மை என்று எடுத்துக்கொள்ளக்கூடாது என்கிறார்கள்.

“இந்தியர்களை ஜெனரேடிவ் ஏஐ (generative AI) பயன்பாட்டிற்கு பழக்கப்படுத்திவிட்டு, அதன்பிறகு அதற்கு பணம் செலுத்தச் சொல்வதுதான் திட்டம்” என்று கவுன்ட்டர்பாயின்ட் ரிசர்ச்சில் ஆய்வாளராக இருக்கும் தருண் பதக் பிபிசியிடம் தெரிவித்தார்.

By admin