• Wed. Oct 22nd, 2025

24×7 Live News

Apdin News

Chennai weather: காற்றழுத்த தாழ்வுப் பகுதி புயலாக உருவாகுமா? தயார் நிலையில் மீட்பு படை

Byadmin

Oct 21, 2025


ராமநாதபுரம் மாவட்டத்தில், மண்டபம் அடுத்த கலைஞர் நகர் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.
படக்குறிப்பு, ராமநாதபுரம் மாவட்டத்தில், மண்டபம் அடுத்த கலைஞர் நகர் பகுதியில் 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது.

வங்கக் கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ள நிலையில், கனமழை காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இந்நிலையில் சென்னையில் இன்று (அக்டோபர் 21) செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா, “வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக உருவாகுமா என்பது நாளை (அக்டோபர் 22) தெரியும். அக்டோபர் 21 மற்றும் 22, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.” என கூறியுள்ளார்.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 59 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்தார்.



By admin