இந்த ராஜதந்திரப் பூசல்களுக்கு மத்தியில், தெஹ்ரான் தனது இராணுவக் கோரிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. தஸ்னிம் செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி அல் ஜசீரா வெளியிட்ட செய்தியின்படி, ஹார்முஸ் ஜலசந்திக்கு அருகே ஒரு அமெரிக்க ஏ-10 விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் கூறியுள்ளது.
ஏ-10 என்பது, குறிப்பாகத் தரைப்படைகளுக்கு எதிராக, நெருங்கிய வான்வழி ஆதரவுப் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட ஒரு அமெரிக்கத் தரைத் தாக்குதல் விமானம் ஆகும்.
இது தொடர்பான ஒரு நிகழ்வில், ஈரானின் வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட ஒரு அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து விமானப் பணியாளர் ஒருவரை அமெரிக்கப் படைகள் வெற்றிகரமாக மீட்டுள்ளதாக சி.என்.என். தெரிவித்ததது. அந்த நபர் உயிருடன் இருப்பதாகவும், “அமெரிக்கக் காவலில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும்” கூறப்படுகிறது.