• Mon. Sep 22nd, 2025

24×7 Live News

Apdin News

H1B விசா விதிகள் மாற்றத்தால் இந்தியர்கள் மத்தியில் குழப்பம் – வெள்ளை மாளிகை அளித்த விளக்கம்

Byadmin

Sep 22, 2025


ஹெச்1பி விசா என எழுதப்பட்டு  புகைப்படம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, விசா பற்றிய டிரம்ப்பின் புதிய உத்தரவு அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது

அமெரிக்காவில் வசிக்கும் தெற்காசியாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு, H-1B விசா என்பது நீண்ட காலமாக உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப சந்தையில் கல்வி சார்ந்த தொழில்கள், ஆராய்ச்சி வாய்ப்புகள் மற்றும் வேலைகளுக்கான ஒரு பாலமாக இருந்து வருகிறது. ஆனால் இந்த பாலம் திடீரென பாதுகாப்பற்றதாக தோன்றுகிறது என்கிறார் வாஷிங்டன் டிசியிலிருந்து எழுதும் பிபிசி செய்தியாளர் இராம் அப்பாசி.

கடந்த செப். 19ஆம் தேதி, புதிதாக H-1B விசா விண்ணப்பிக்க ஒரு லட்சம் அமெரிக்க டாலர் கட்டணமாக செலுத்த வேண்டும் என அதிபர் டிரம்ப் அறிவித்தார். இந்த விதி இன்று (செப். 21) முதல் அமலுக்கு வருகிறது.

இந்த நடவடிக்கையை, அமெரிக்க ஊழியர்களை பாதுகாக்கும் நடவடிக்கை என்றும், விசா நடைமுறையை தவறாக பயன்படுத்துவதை தடுப்பது என்றும், அதிக திறன் உள்ள மற்றும் அதிகம் சம்பாதிக்கும் வெளிநாட்டு ஊழியர்களே தேர்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அரசு கூறுகிறது.

அமெரிக்க வர்த்தக செயலர் ஹோவர்ட் லுட்னிக் ராய்ட்டர்ஸ் செய்தியிடம் கூறுகையில், “நீங்கள் யாருக்காவது பயிற்சி அளிக்கப் போகிறீர்கள் என்றால், நம் நாடு முழுவதும் உள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றிலிருந்து சமீபத்தில் பட்டம் பெற்ற ஒருவருக்குப் பயிற்சி அளியுங்கள். அமெரிக்கர்களுக்கு பயிற்சி அளியுங்கள். நமக்கான வேலைவாய்ப்பை மற்றவர்கள் தட்டிப் பறிக்கவிடாதீர்கள்” என்றார்.

By admin