• Sun. Oct 19th, 2025

24×7 Live News

Apdin News

IND vs AUS: கோலி, ரோஹித் இருவரும் சவாலான ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் எவ்வாறு செயல்பட்டுள்ளனர்?

Byadmin

Oct 19, 2025


விராட் கோலி, ரோஹித் சர்மா, இந்தியா - ஆஸ்திரேலியா தொடர், பிசிசிஐ, ஒருநாள் தொடர்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய அணிக்காக சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் இருவரும் கடைசியாக விளையாடினர்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விராட் கோலியும் ரோஹித் ஷர்மாவும் களமிறங்கப் போவதால், ஆஸ்திரேலிய தொடர் மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக, இவர்கள் இருவருமே கேப்டனாக அல்லாமல் வெறும் வீரர்களாக மட்டுமே களம் காணப்போகிறார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20ஐ போட்டிகளில் பங்கேற்கிறது. ஒருநாள் தொடரின் முதல் போட்டி பெர்த் நகரிலுள்ள ஆப்டஸ் மைதானத்தில் இன்று (அக்.19) நடக்கிறது. கடைசியாக 2025 ஐபிஎல் தொடருக்குப் பிறகு விராட், ரோஹித் இருவரும் களத்தில் விளையாடுவதை பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிட்டவில்லை. சர்வதேச டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்ட கோலி, ரோஹித் இருவரும் இனி ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே இந்திய அணிக்காக பங்கேற்பார்கள்.

இந்நிலையில், இந்த 5 மாதங்களில் முதல் முறையாக சர்வதேச ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா விளையாடுகிறது. அவர்கள் இருவருமே அணியில் இடம் பெற்றுள்ளனர். அதனால், இந்தத் தொடர் பற்றிய அனைத்து விளம்பரங்களும், செய்திகளும் ‘ரோ-கோ’ என இவர்களை முன்னிலைப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றன.

எதிர்காலத்தின் மீதான கேள்விகளும் பதில்களும்

அவர்கள் இருவரின் பங்கேற்பு பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்திருப்பதற்கான முக்கியக் காரணம், அவர்களின் எதிர்காலத்தின் மீது எழுந்திருக்கும் கேள்வி. இரண்டு வாரங்கள் முன்பு இந்திய ஒருநாள் அணிக்கும் சுப்மன் கில்லையே கேப்டனாக அறிவித்தது பிசிசிஐ நிர்வாகம்.



By admin