• Fri. Aug 1st, 2025

24×7 Live News

Apdin News

IND vs ENG: கடைசி டெஸ்டிற்கு இரு அணி வீரர்களும் தயார் – மைதான ஊழியருடன் கம்பீர் வாக்குவாதம் ஏன்?

Byadmin

Jul 30, 2025


இந்தியா - இங்கிலாந்து, 5-வது டெஸ்ட், கம்பீர் சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர்

இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டிக்கு முன்பான பயிற்சியின் போது சர்ரே மைதான பணியாளருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

சர்ரே மைதானத்தின் தலைமை பணியாளர் லீ ஃபோர்டில் உடன் விரலை நீட்டி கம்பீர் பேசியது வலைப் பயிற்சி காணொளியில் பதிவாகியுள்ளது. அந்தக் காணொளியில் கம்பீர், “நாங்கள் என்ன செய்ய வேண்டும் என நீங்கள் கூற முடியாது” மற்றும் “நீங்கள் ஒரு களப் பணியாளர் மட்டுமே, அதற்கு மேல் எதுவும் இல்லை” என உரக்க கூறியதை கேட்க முடிந்தது.

சம்பவம் நடந்த போது அங்கிருந்த இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், அதன் பின்னர் செய்தியாளர் சந்திப்பில் பேசியபோது “டெஸ்ட் போட்டிகாக விக்கெட்டை (ஆடுகளத்தை) பார்வையிட பயிற்சியாளர்கள் சென்ற போது விலகிச் செல்லுமாறு கூறப்பட்டனர்” எனத் தெரிவித்தார்.

“நாங்கள் விக்கெட் மீது நின்று அதைப் பார்த்துக் கொண்டிருந்த போது, மைதான பணியாளர்களில் ஒருவர் வந்து அங்கிருந்து இரண்டரை மீட்டர் தள்ளி நிற்குமாறு கூறினார். என்னுடைய கிரிக்கெட் கரியரில் யாரும் அப்படிச் சொல்லி நான் பார்த்ததில்லை” என கோடக் தெரிவித்தார்.

By admin