• Mon. Sep 22nd, 2025

24×7 Live News

Apdin News

IND vs PAK இந்தியா மீண்டும் வெற்றி: பாகிஸ்தான் பற்றி சூர்யகுமார் கூறியது என்ன?

Byadmin

Sep 22, 2025


இந்தியா - பாகிஸ்தான், சூர்யகுமார், அபிஷேக் சர்மா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரைசதம் அடித்த பாகிஸ்தான் வீரர் பர்ஹானின் ‘கன்ஷாட்’ கொண்டாட்டம்

    • எழுதியவர், தினேஷ் குமார்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

ஆசிய கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் நேற்று துபையில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. லீக் சுற்றில் பாகிஸ்தானை படுதோல்வி அடைய செய்த சூர்யகுமார் தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் வென்று இந்த தொடரின் முன்னணி அணியாக திகழ்கிறது.

பேட்டிங், பவுலிங் என அனைத்து துறைகளிலும் பலவீனமாக உள்ள சல்மான் அகா தலைமையிலான பாகிஸ்தான் அணி, முந்தைய தோல்விக்குப் பதிலடி கொடுக்க வேண்டும் என்ற உறுதியுடன் களமிறங்கியது.

கைகுலுக்குவதை மீண்டும் தவிர்த்த சூர்யகுமார் யாதவ்

பாகிஸ்தானுக்கு எதிரான முந்தைய ஆட்டத்தை போலவே, நேற்றும் இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், டாஸ் நிகழ்வில் பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்கவில்லை. டாஸ் வென்ற சூரியகுமார் யாதவ், பந்துவீச்சை தேர்வுசெய்தார்.

ஆட்டத்துக்கு முந்தைய நாள், துபையில் ஈரப்பதம், பனிப்பொழிவு நிலவியதால், பந்துவீச்சை தேர்வு செய்ததாக தெரிவித்தார். முன்னதாக, துபையில் பனிப்பொழிவு (dew) ஒரு பிரச்சினை அல்ல என்று அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

By admin