பஞ்சாப் அணி சார்பில் மார்கோ யான்சன், சாஹல் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். பின்னர் 197 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் செய்தது.
தொடக்க வீரராக இறங்கிய பிரியான்ஷ் ஆர்யா ரன் ஏதுமின்றி அவுட்டாக மற்றொரு தொடக்க வீரர் பிரப்சிம்ரன் சிங், அதிரடியாக ஆடி களத்தில் நின்றார். அவருடன் ஜோடி சேர்ந்த கூப்பர் கானலி 18 ரன்களில் போல்ட் ஆனார்.
பிரப்சிம்ரன் சிங் 21 ரன்கள் ஜஸ்ட் மிஸ்ஸில் அவுட் ஆகாமல் தப்பவே, அவரை அதன்பின் வீழ்த்த முடியாமல் லக்னோ பந்துவீச்சாளர்கள் திணறினர்.