மக்களுக்காக அதிகாரிகள் செயல்பட வேண்டும். இல்லையெனில் தூய்மை பணியாளர்கள், அரசுப்பணியாளர்கள், செவிலியர்கள் ரோட்டுக்கு வந்து போராடியது போல் அவர்களையும் தி.மு.க., ரோட்டில் உட்கார வைத்துவிடுவார்கள். திண்டுக்கல் கோம்பை, ஒட்டன்சத்திரம் வனப்பகுதியில் வன அத்துமீறல், சட்டவிரோத தடுப்பணை கட்டியது உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு எதிரான நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை முன்வைக்கிறேன். நிச்சயம் தவறு செய்யும் அதிகாரிகள் மீது புகார் அளிப்பேன். அ.தி.மு.க., தே.ஜ., கூட்டணியில் பா.ம.க., வேட்பாளர்கள் களமிறங்கும் தொகுதிகளில் போட்டி வேட்பாளர்களை பா.ம.க., ராமதாஸ் நிறுத்துவார் என நினைக்க வேண்டியதில்லை. அங்கிருப்பவர்கள், அவர் மீதான பாசத்தில், விட்டுக்கொடுக்க முடியாமல் நிற்கிறார்களே தவிர, பா.ம.க., தலைவர் அன்புமணியை தோற்கடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இல்லை என்றார்.