• Wed. Jun 4th, 2025

24×7 Live News

Apdin News

RCB Vs PBKS: இறுதிப் போட்டியில் ஆர்சிபி – 10 ஓவர்களில் பஞ்சாபை வீழ்த்தியது எப்படி?

Byadmin

May 30, 2025


RCB Vs PBKS: டாஸ் வென்ற ஆர்சிபி அதிரடி- 3 விக்கெட்டுகளை இழந்த பஞ்சாப்

பட மூலாதாரம், Getty Images

  • எழுதியவர், க. போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக

முலான்பூரில் இன்று(மே 29) நடந்த ஐபிஎல் டி20 தொடரின் ப்ளே ஆஃப் சுற்றில் முதல் தகுதி ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆர்சிபி அணி.

இதன் மூலம் ஆர்சிபி அணி 4வது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது. 2009, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய பிறகு, ஏறக்குறைய 9 ஆண்டுகள் கழித்து ஆர்சிபி பைனலுக்கு தகுதியாகியுள்ளது.

டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த பஞ்சாப் அணி, 14.1 ஓவர்களில் 101 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 102 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய ஆர்சிபி 10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 106 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

ஆர்சிபி தொடக்க ஆட்டக்கார்ர பில் சால்ட் 23 பந்துகளில் அரைசதம் அடித்து 56 ரன்களிலும், கேப்டன் பட்டிதர் 15 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.

By admin