• Fri. May 30th, 2025

24×7 Live News

Apdin News

RCB vs PBKS: ஐபிஎல் பிளேஆஃப் சுற்று எந்த அணிக்கு சாதகமாக இருக்கும்? ஓர் அலசல்

Byadmin

May 29, 2025


2025 ஐபிஎல், ப்ளே ஆஃப் சுற்று, பஞ்சாப், ஆர்சிபி, மும்பை, குஜராத்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிக்காக ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 4 அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன

2025 ஐபிஎல் சீசன் இறுதிக் கட்டத்தை எட்டியிருக்கிறது. ப்ளே ஆஃப் போட்டிகள் இன்று ( மே29) தொடங்குகின்றன. 2 அணிகள் முதல் தகுதிச் சுற்றுப் போட்டியிலும், 2 அணிகள் எலிமினேட்டரிலும் விளையாடுகின்றன.

இந்த ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிக்காக பஞ்சாப் கிங்ஸ், ஆர்சிபி, குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 4 அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன.

அடுத்த மாதத்திலிருந்து உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், பல வெளிநாட்டு தொடர்கள் தொடங்க இருப்பதால், ஆஸ்திரேலிய, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணி வீரர்கள் பலர் தங்கள் அணியிலிருந்து விலகியுள்ளனர். இதனால் லீக் ஆட்டங்களில் பல நேரங்களில் வெற்றிக்கு காரணமாக இருந்த வெளிநாட்டு வீரர்கள் பலர் ப்ளே ஆஃப் சுற்றுப் போட்டிகளில் விளையாட முடியாத நிலையில் இருப்பது அணிகளுக்கு சற்று பின்னடைவாக அமைந்திருக்கிறது.

இருப்பினும் அதை ஈடுகட்டும் நோக்கில் வேறு வீரர்களை அணியில் சேர்த்து ப்ளேஆஃப் சுற்றை 4 அணிகளும் எதிர்நோக்குகின்றன.

By admin