• Sat. Apr 19th, 2025

24×7 Live News

Apdin News

RCB vs PBKS: சொந்த மண்ணில் ஆர்சிபி ஹாட்ரிக் தோல்வி – கோலி அணி பேட்டிங் சொர்க்கபுரியில் 95 ரன்னில் சுருண்டது ஏன்?

Byadmin

Apr 19, 2025


பஞ்சாப், பெங்களூரு, ஆர்சிபி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, விராட்  கோலி, ஸ்ரேயாஸ் அய்யர்

பட மூலாதாரம், Getty Images

பெங்களூரு சின்னசாமி அரங்கில் நேற்று நடந்த ஐபிஎல்லின் 34-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது பஞ்சாப் கிங்ஸ் அணி.

மழை காரணமாக நீண்ட தாமதத்துக்குப்பின் 14 ஓவர்களாகக் குறைக்கப்பட்டு போட்டி நடந்தது. இதில் முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 9 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் சேர்த்தது. 96 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 11 பந்துகள் மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 98 ரன்கள் சேர்த்து வென்றது.

நடப்பு சீசனில் வெளியூர் மைதானங்களில் விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றியை ருசித்துள்ள ஆர்சிபி அணி, தனது சொந்த மைதானத்தில் நடந்த மூன்றாவது போட்டியிலும் தொடர்ந்து தோல்வியைச் சந்தித்துள்ளது. பேட்டிங் சொர்க்கபுரியான பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் என்ன நடந்தது?

ஆர்சிபி மோசமான பேட்டிங்

பஞ்சாப், பெங்களூரு, ஆர்சிபி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, விராட்  கோலி, ஸ்ரேயாஸ் அய்யர்

பட மூலாதாரம், Getty Images

ஆர்சிபி அணி இந்த சீசனில் தனது மோசமான பேட்டிங்கை நேற்று வெளிப்படுத்தியது. எந்த பேட்டரும், எந்தத் திட்டமிடலும் இன்றி களத்துக்கு வந்து விளையாடினர். தொடக்கத்தில் விக்கெட்டை இழந்து செல்லும் பேட்டர்கள் ஆடுகளத்தின் தன்மையைக் கூறி மற்ற பேட்டர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பினார்களா எனத் தெரியவில்லை. அனைத்து பேட்டர்களும் ஒரே மனநிலையில் வந்து பெரிய ஷாட்களுக்கு முயன்று விக்கெட்டுகளை இழந்தனர்.

By admin