• Thu. Jun 5th, 2025

24×7 Live News

Apdin News

RCB Vs PBKS: புதிய சாம்பியன் நிச்சயம் – கோப்பை வெல்லும் லட்சியம் யாருக்கு?

Byadmin

Jun 3, 2025


பஞ்சாப், ஆர்சிபி, ஸ்ரேயாஸ் ஐயர், விராட் கோலி

பட மூலாதாரம், Getty Images

(இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது)

2025 ஐபிஎல் சீசன் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் இறுதிப் போட்டியில் ஆர்சிபி அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் இன்று இரவு 7.30 மணிக்கு ஆமதாபாத் நரேந்திர மோதி மைதானத்தில் பலப்பரிட்சை நடத்துகின்றன.

டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

இரு அணிகளும் கடந்த 18 சீசன்களாக இறுதிப்போட்டிவரை தான் அதிகபட்சமாக முன்னேறியுள்ளன. ஆனால், ஒருமுறைகூட கோப்பையை வென்றதில்லை. ஆதலால், இரு அணிகளுக்கும் 18 ஆண்டுகால காத்திருப்பு நனவாகப்போகிறதா, அல்லது கனவாகவே இருக்கப் போகிறதா என்பது இன்று தெரிந்துவிடும்.

By admin