இந்த கட்சிகளின் தலைவர்களும், வேட்பாளர்களும் தேர்தல் களத்தில் வரிந்து கட்டிக்கொண்டு வேட்பு மனு தாக்கல் செய்வதிலும், தங்களது கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரசாரம் செய்வதிலும் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதனால் தமிழக தேர்தல் களம் தற்போது அனல் பறக்கிறது.
இதேபோல தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் திருவாரூரில் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி நேற்று நெல்லை மாவட்டத்தில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அங்கு பிரசாரத்தை முடித்ததும் நேற்று இரவு குமரி மாவட்டம் வந்தார். அவருக்கு கன்னியாகுமரியில் உள்ள ஒரு தனியார் ஓட்டலில் தி.மு.க.வினரும், கூட்டணி கட்சியினரும் பிர மாண்ட வரவேற்பு அளித்தனர். வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த ஓட்டலில் தங்கி ஓய்வெடுத்தார்.