• Tue. Feb 10th, 2026

24×7 Live News

Apdin News

T20 WC: இந்தியா உடன் பாகிஸ்தான் விளையாட முடிவெடுத்தது குறித்து அந்நாட்டு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறுவது என்ன?

Byadmin

Feb 10, 2026


இந்தியா உடன் விளையாட முடிவு - பாகிஸ்தான் முன்னாள்  கிரிக்கெட் வீரர்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் புறக்கணிக்க பாகிஸ்தான் எடுத்த முடிவு இப்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது, மேலும் இது குறித்து பாகிஸ்தானிலும் அதிக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

பல பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் இதை ‘பாகிஸ்தானின் வெற்றி’ என்று விவரிக்கின்றனர்.

ஜியோ நியூஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரஷீத் லத்தீப், “இந்த முடிவுக்கு, பாகிஸ்தானுக்கு இலங்கை அதிபர் நன்றி தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அரசாங்கங்கள் தலையிட்டதால், இது விளையாட்டைத் தாண்டிச் சென்றுவிட்டது.”

“பாகிஸ்தானின் இந்த முடிவு வங்கதேசம் மற்றும் நமது பிற கிரிக்கெட் உறுப்பினர்களின் நலனுக்காக அவசியமானது, ஏனெனில் இந்த உறுப்பு நாடுகளும் இந்தியா – பாகிஸ்தான் போட்டியிலிருந்து கிடைக்கும் வருவாயிலிருந்து பணத்தைப் பெறுகின்றன,” என்றார்.

“நாங்கள் அவர்களுக்காக இதைச் செய்தோம். பாகிஸ்தான் ஐ.சி.சி-யை மண்டியிட வைத்தது. சர்வதேச கிரிக்கெட்டில் நமது முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும்” என்று லத்தீஃப் கூறினார்.

By admin