தி.மு.க.-அ.தி.மு.க. சார்பில் நடைபெறும் கூட்டங்களுக்கு பணம், பிரியாணி, குவாட்டர் ஆகியவை கொடுத்து தான் கூட்டம் சேர்த்து வருகின்றனர். ஆனால் நாங்கள் பணம், பிரியாணி, குவாட்டர் கொடுப்பதில்லை.
விஜய்க்கு கூடுவது தானாக சேர்ந்த கூட்டம். மேலும் மேக்-அப் போடாமல் உணர்வுபூர்வமாக மக்களை சந்திக்கும் ஒரே தலைவர் விஜய்தான். ஆனால் மாற்றுக் கட்சியினர் தலையில் டை அடிக்காமல், மேக்-அப் போடாமல் வெளியே வருவதில்லை. நடிகனை போல வலம்வந்து மக்களை ஏமாற்றுகின்றனர்.
தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மத்தியில் வாக்கு சேகரிக்க, பிரதமர் மோடி ஷூட்டிங் நடத்தி அந்த புகைப்படத்தை வெளியிடுகிறார்.