விபத்துக்கு பிறகு நடந்தது என்ன?
முதல் தகவல் அறிக்கையின்படி, பாரதியும் அவரது சக ஊழியரான 26 வயது பூஜா அசோக் அலோனும், ஞாயிற்றுக்கிழமை மதியம் சுமார் 3 மணியளவில் மதிய உணவுக்காக அருகில் உள்ள ஐடிசி கோஹினூர் பகுதிக்கு சென்றிருந்தனர். அவர்கள் பணி இடத்திற்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, பாரதி மாலுக்கு முன்னால் சாலையை கடக்க முயன்றபோது, ஆஸ்டன் மார்ட்டின் (TG-09-G-0666) வாகனம் அவர் மீது மோதியதாக கூறப்படுகிறது.
இதில் பாரதிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது, மேலும் அவருக்கு அதிக இரத்தப்போக்கு ஏற்பட்டது. அவர் அதே காரில் ஜூபிலி ஹில்ஸில் உள்ள அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.