• Fri. Aug 21st, 2026

24×7 Live News

Apdin News

முதுமலையில் 11 நாட்களில் 3 யானைகள் உயிரிழப்பு ஏன்?

Byadmin

Aug 21, 2026


முதுமலையில் 11 நாட்களில் 3 யானைகள் உயிரிழப்பு ஏன்?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

    • எழுதியவர், சுதாகர்
    • பதவி, பிபிசி தமிழுக்காக
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

முதுமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மசினகுடி மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் 11 நாட்களுக்குள் மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன.

நீலகிரி மாவட்டத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாத நிலையில், வனப்பகுதிகளில் வறட்சி அதிகரித்து வருவதே இந்த உயிரிழப்புகளுக்குக் காரணமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஆனால், உயிரிழந்த மூன்று யானைகளின் இறப்புக்கும் வறட்சி காரணமில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

வயது முதிர்வு, காயங்கள் உள்ளிட்ட காரணங்களே முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.

மசினகுடி வனச்சரகத்துக்கு உட்பட்ட குதிரைப்பாறை பகுதியில் பெண் யானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டறியப்பட்டது. இதேபோல் மாவனல்லா அருகே அரலட்டிக்கோட்டை வனப்பகுதியிலும் மற்றொரு பெண் யானை இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

By admin