இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அநுரகுமார திஸாநாயக்கவை இன்று (22) சந்தித்த இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா, இந்தியத் தலைமைத்துவத்தின் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், மக்களின் ஆணையை வென்றமைக்காகப் பாராட்டுகளையும் தெரிவித்தார்.
பல நாகரிக ஒற்றுமைகளைக் கொண்டுள்ள இரட்டையராகவும், நமது இரு நாடுகளினதும் மக்களது செழுமைக்காக உறவுகளை மேலும் வலுவாக்கவும் இந்தியா உறுதி பூண்டுள்ளது என்றும் இதன்போது அவர் மேலும் கூறினார்.