• Thu. Jul 17th, 2025

24×7 Live News

Apdin News

அனை​வரும் ஒற்​றுமை​யாக இருந்து தமிழை பாதுகாக்க வேண்டும்: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வலியுறுத்தல் | VIT Chancellor urged to everyone should stand united and protect Tamil

Byadmin

Jul 17, 2025


மேலக்கோட்டையூர்: தமிழியக்​கம் மற்​றும் மறைமலை அடிகள் கல்வி அறக்​கட்​டளை சார்​பில், மறைமலை அடிகள் 150-வது பிறந்த நாள் விழா மற்​றும் நூல் வெளி​யீட்டு விழா, வண்​டலூர் அருகே மேலக்​கோட்​டையூரில் உள்ள விஐடி சென்​னை​யில் நேற்று நடந்​தது. விழாவுக்​கு, தமிழியக்​கத்​தின் தலை​வரும் விஐடி வேந்​தரு​மான முனை​வர் கோ.​விசுவ​நாதன் தலைமை தாங்கி​னார்.

விழா​வில், மறைமலை அடிகளார் பேரன் மறை தி.​தா​யு​மானவன் தயாரித்த மறைமலை அடிகளாரின் நாட்​குறிப்​பேடு என்ற தலைப்​பிலான நூலை விஐடி வேந்​தர் கோ.​விசுவ​நாதன் வெளி​யிட, ஆளூர் ஷாந​வாஸ் எம்எல்ஏ பெற்​றுக் கொண்​டார்.

விழா​வில், கோ.​விசுவ​நாதன் பேசும்​போது, ”தமிழ் மொழிக்கு பிறகு சம்​ஸ்​கிருதம், தெலுங்​கு, கன்​னடம், மலை​யாளம், ஒடியா ஆகிய மொழிகளுக்கு செம்​மொழி அந்​தஸ்து வழங்​கப்​பட்​டது. கடந்த 10 ஆண்​டு​களில் சம்​ஸ்​கிருதம் மொழி வளர்ச்​சிக்​காக மத்​திய அரசு ரூ.2,500 கோடி செலவு செய்​துள்​ளது.

அது​வே, தமிழ், தெலுங்​கு,கன்​னடம், மலை​யாளம், ஒடியா மொழிகளுக்கு வெறும் ரூ.140 கோடி தான் செலவு செய்​துள்​ளது. இதில் இருந்தே மத்​திய அரசின் அணுகு​முறையை அறிந்து கொள்​ளலாம். தற்​போது, தமிழுக்கு நேரடி​யாக அல்ல மறை​முக​மாகஆபத்து வரு​கிறது. தமிழ்​நாடு பல விதங்​களில் நெடுக்​கருக்​கடிகளை சந்​தித்து வரு​கிறது. இச்சூழலில் அனை​வரும் ஒற்​றுமை​யாக இருந்து தமிழை பாதுகாக்க வேண்டும்” என்​றார்.

விழா​வில், எம்​எல்ஏ ஆளூர் ஷாந​வாஸ் பேசுகை​யில், “இந்த உலகம் உள்​ளவரை தமிழ் மொழி நெடுங்​காலம் வாழும். இன்​றைய தலை​முறை​யினரிடம் ஆழ்ந்த வாசிப்பு பழக்​கம் இல்​லை. இளம் தலை​முறை​யினர் அவ்​வாறு இல்​லாமல் நம்​முடைய வேரை தேடி போக வேண்​டும். நீண்ட நெடு போ​ராட்​டத்​துக்கு பிறகு தான் தமிழ் மொழிக்கு செம்​மொழி அந்தஸ்து வழங்​கப்​பட்​டது” என்​றார்.

விழா​வில் தமிழியக்​கம் மாநிலச் செய​லா​ளர் சொற்​கோ.​மு.சுகு​மார், பொதுச்​செய​லா​ளர் அப்​துல்​காதர், பொருளாளர் புல​வர் வே.​பது​ம​னார், மேலாண்​மைக் குழு உறுப்​பினர் முனை​வர் வெ.​முத்​து, சென்னை கம்​பன் கழகம் செய​லா​ளர் முனை​வர் சாரதா நம்பி ஆரூரன், மறைமலை அடிகள் கல்வி அறக்​கட்​டளை தலை​வர் மறை தி.​தா​யு​மானவன், காஞ்​சிபுரம் மாவட்​டச் செய​லா​ளர் பு.செந்​தில்​நாதன், மறைமலை அடிகள் கல்வி அறக்​கட்​டளை பொருளாளர் செ.அருட்​செல்​வன் உள்​ளிட்ட பலர் பங்​கேற்​றனர்​.



="a2a_kit a2a_kit_size_32 addtoany_list" data-a2a-url="https://24x7livenewz.com/tamil/%e0%ae%85%e0%ae%a9%e0%af%88%e0%ae%b5%e0%ae%b0%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87/8264820/" data-a2a-title="அனை​வரும் ஒற்​றுமை​யாக இருந்து தமிழை பாதுகாக்க வேண்டும்: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் வலியுறுத்தல் | VIT Chancellor urged to everyone should stand united and protect Tamil">

By admin