• Tue. Jul 21st, 2026

24×7 Live News

Apdin News

அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்ததாக கூறும் சிஜேபி – போராட்டத்தை முடிக்க ஜே.பி. நட்டா கோரிக்கை

Byadmin

Jul 21, 2026


ஜே.பி. நட்டாவுடன் என்ன பேசப்பட்டது?

பட மூலாதாரம், @JPNadda

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

நாடாளுமன்றத்தை நோக்கி பேரணிக்கான அழைப்புக்கு மத்தியில் காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி), தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அழைப்பு விடுத்ததாகக் கூறியுள்ளது.

கட்சியின் செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ், தாம் மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டாவை சந்தித்ததாகவும், தங்களது கோரிக்கைகள் குறித்து உரிய மட்டத்தில் பேசுவதாக அவர் உறுதியளித்ததாகவும் தெரிவித்துள்ளார்.

ஷார்ட் வீடியோ

காணொளிக் குறிப்பு, டெல்லி போராட்டக்காரர்கள் மீது தடியடி.

கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜினாமாவை வலியுறுத்தி, கடந்த ஒரு மாதமாக காக்ரோச் ஜனதா கட்சி டெல்லியின் ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தி வருகிறது.

இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக, லடாக்கைச் சேர்ந்த சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.

23 நாட்களாக உண்ணாவிரதத்தில் இருந்த சோனம் வாங்சுக்கை, ஜூலை 18 சனிக்கிழமை டெல்லி காவல்துறை ஜந்தர் மந்தரில் இருந்து அழைத்துச் சென்று மருத்துவமனையில் அனுமதித்தது.

By admin