• Sun. Sep 13th, 2026

24×7 Live News

Apdin News

அலாஸ்கா கடலில் கவிழ்ந்த படகின் மீது 2 நாட்கள் அமர்ந்திருந்து உயிர் தப்பிய 15 வயது சிறுவன்

Byadmin

Sep 13, 2026


படகு கவிழ்ந்து உடன் வந்தவர்கள் உயிரிழக்க, கவிழ்ந்த படகின் மீது 2 நாட்கள் அமர்ந்து உயிர் தப்பிய 15 வயது சிறுவன்

பட மூலாதாரம், Reuters

    • எழுதியவர், கிரேஸ் எலிசா குட்வின்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

அலாஸ்காவின் பெரிங் கடலின் கடும் குளிரான நீரில் கவிழ்ந்த படகின் மீது சுமார் 2 நாட்கள் அமர்ந்திருந்த 15 வயது சிறுவன் ஒருவர் மீட்கப்பட்டுள்ளார்.

குடும்பத்தினர் டெரெக் பார்க்கர் அக்னாங்கா என அடையாளம் தெரிவித்துள்ள அந்தச் சிறுவன், அந்தப் படகில் இருந்தவர்களில் உயிர் பிழைத்த ஒரே நபர் ஆவார். இந்தச் சம்பவத்தில் அவரது மூத்த சகோதரரும், உறவினர் ஒருவரும் உயிரிழந்தனர்.

அந்த மூவரும் செப்டம்பர் 4, வெள்ளிக்கிழமை அன்று செயின்ட் லாரன்ஸ் தீவில் இருந்து புறப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை பிற்பகலுக்குள் அவர்கள் திரும்பியிருக்க வேண்டும் என்று அமெரிக்க கடலோரக் காவல்படை தெரிவித்துள்ளது.

ஆனால், 18 அடி நீளமுள்ள மீன்பிடிப் படகு திரும்பி வராததால், கடலோரக் காவல்படை தேடுதல் பணியைத் தொடங்கியது.

திங்கள்கிழமை காலை, கடலோரக் காவல்படையின் விமானக் குழுவினர் கவிழ்ந்த படகின் மீது சிறுவன் அமர்ந்திருப்பதைக் கண்டனர். இந்தநிலையில் அருகில் வந்த கப்பலில் இருந்தவர்கள் அவரை மீட்டு பாதுகாப்பான இடத்துக்குக் கொண்டு சென்றார்.

By admin