கும்பாபிஷேக விழாவில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தளவாய் சுந்தரம், நாகர்கோவில் முன்னாள் மேயர் மகேஷ், த.வெ.க. மாவட்ட செயலாளர் மாதவன், கோவில் ஸ்ரீ காரியம் சேம ராஜா கண்காணிப்பாளர் சிவக்குமார், சென்னை ராஜலட்சுமி கல்வி குழுமம் தாளாளர் மேகநாதன் பெங்களூர் லேப்சில்குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் சி.இ.ஓ. பரசு பிள்ளை, தாழக்குடி பேரூராட்சி மன்ற தலைவரும், கும்பாபிஷேக திருப்பணி குழு தலைவருமான சிவக்குமார் துணைத் தலைவர் சுப்பிரமணிய சதீஷ் செயலாளர் குமரப்பெருமாள் பிள்ளை, கவுன்சிலர் இரவி பிள்ளை பொருளாளர் சிவம் மற்றும் கௌரவ ஆலோசகர்கள் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
அன்னதானம்
இதனை தொடர்ந்து அபிஷேகமும், மாபெரும் அன்னதானமும், தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் அழகேஸ்வரிஜெயந்தீஸ்வரர் சுவாமி திருக்கல்யாணமும், இரவு பஞ்சமூர்த்திவீதிஉலா வருதலும் நடைபெற்றது.
விழாவுக்கான ஏற்பாட்டை திருக்கோவில் நிர்வாகம், மற்றும் கும்பாபிஷேக திருப்பணிக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.