• Thu. Jul 24th, 2025

24×7 Live News

Apdin News

ஆமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தோரின் சடலங்கள் மாற்றப்பட்டதா? – வெளியுறவு அமைச்சகம் விளக்கம்

Byadmin

Jul 23, 2025


ஏர் இந்தியா, அகமதாபாத் விமான விபத்து, விசாரணை அறிக்கை, குஜராத் விமான விபத்து, ஷோபனா படேல்

பட மூலாதாரம், Miten Patel

படக்குறிப்பு, ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த ஷோபனா படேல் மற்றும் அவரது கணவர்

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த பிரிட்டிஷ் பெண்ணான ஷோபனா படேலின் மகன் பிபிசியிடம் பேசுகையில், அவரது உடல் பிரிட்டனுக்கு வந்த பிறகு, அவரது சவப்பெட்டியில் “வேறு நபரின் சடலங்களின் எச்சங்கள்” கண்டெடுக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.

விபத்தில் தனது பெற்றோர் இருவரையும் இழந்த மிட்டன் படேல் கூறுகையில், கலவையான எச்சங்களை அடையாளம் கண்ட பிரேத பரிசோதனை அதிகாரி, “இன்னும் எத்தனை பேர் உள்ளே இருக்கிறார்கள்?” என்று தெரிவித்ததாக கவலைப்படுகிறார்.

ஆமதாபாதில் ஜூன் மாதம் நிகழ்ந்த ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். சடலங்கள் அவர்களது குடும்பத்தினருக்கு அனுப்பப்பட்ட நிலையில், அவற்றில் சில தவறாக அனுப்பப்பட்டிருப்பதாக டெய்லி மெயில் புதன்கிழமையன்று (2025 ஜூலை 23) செய்தி வெளியிட்டது .

உயிரிழந்தவர்கள் அனைவரின் எச்சங்களும் “உகந்த தொழில்முறை ரீதியிலும்” கண்ணியத்துடன் கையாளப்பட்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எழுப்பும் கவலைகளை நிவர்த்தி செய்ய, பிரிட்டன் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.

By admin