• Sat. Jun 13th, 2026

24×7 Live News

Apdin News

ஆமதாபாத் விமான விபத்து: உயிரிழந்த பணிப்பெண்ணின் குடும்பம் ஓராண்டுக்குப் பிறகு எப்படி உள்ளது?

Byadmin

Jun 13, 2026


மைதிலி பாட்டீல், ஆமதாபாத் விமான விபத்து, ஏர் இந்தியா விமான விபத்து, ஓராண்டு நிறைவு
படக்குறிப்பு, மைதிலி பாட்டீலின் தாயார் பிரமிளா பாட்டீல்

    • எழுதியவர், அல்பேஷ் கற்கரே
    • பதவி, பிபிசி மராத்தி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

2025-ஆம் ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி, குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர்.

உயிரிழந்தவர்களில் மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உரன் தாலுகாவைச் சேர்ந்த நாவா கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான, அந்த ஏர் இந்தியா விமானத்தில் பணிப்பெண்ணாக இருந்த மைதிலி பாட்டீலும் ஒருவர்.

இந்த விபத்து நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ளது. இருப்பினும், இந்த விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பது இன்னும் தெரியவில்லை. எனவே, ஆழமான விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்று மைதிலியின் தாயார் பிரமிளா பாட்டீல் கோரிக்கை விடுத்துள்ளார்.

பிபிசி மராத்தியிடம் பேசிய அவர், “எனது மகள் எனக்குத் திரும்ப கிடைக்கப் போவதில்லை. ஆனால், இந்த விபத்து எதனால் நடந்தது என்பதை அறிய வேண்டும். இதைத் தவிர எனக்கு வேறு எந்த எதிர்பார்ப்பும் இல்லை” என்று கூறினார்.

குடும்பத்தின் மூத்த மகள் மைதிலி

மைதிலி பாட்டீல் நாவா கிராமத்தைச் சேர்ந்தவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஏர் இந்தியா நிறுவனத்தில் விமானத்தில் பணிப்பெண்ணாக அவர் பணியில் சேர்ந்தார்.

By admin