• Sat. Jun 13th, 2026

24×7 Live News

Apdin News

புதுச்சேரிக்கு ரூ.15 ஆயிரம் கோடி சிறப்பு நிதி மத்திய அரசு வழங்கியுள்ளது – எல்.முருகன்

Byadmin

Jun 13, 2026


புதுவை அரசில் 5 ஆயிரம் பணியிடங்கள் நேரடியாக மெரிட் அடிப்படையில் நிரப்பப்பட்டுள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.ஆயிரம் கோடியில் 678 திட்டங்கள் புதுவையில் செயல்படுத்தப்பட்டுள்ளது. 75 மின்சார பஸ்கள் மத்திய அரசு வழங்கியுள்ளது. புதிய பேருந்து நிலையம் கட்டித்தரப்பட்டுள்ளது.

சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க 750 ஏக்கர் நிலம் வழங்கி தொழிற்பேட்டை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இங்கு சுமார் ரூ.20ஆயிரம் கோடிக்கு முதலீடு வரும் வாய்ப்பு உள்ளது. 10 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை கிடைக்கும். புதுவை காவல் துறைக்கு ஜனாதிபதி வர்ண விருது வழங்கப்பட்டுள்ளது.

ஐஆர்பிஎன் 2வது பட்டாலியன் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஆயிரம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு பெறுவர். கடந்த 5 ஆண்டில் புதுவைக்கு மத்திய அரசின் சிறப்பு நிதியாக ஆண்டுக்கு ரூ.3 ஆயிரம் கோடி வீதம் ரூ.15 ஆயிரம் கோடி பிரதமர் மோடி வழங்கியுள்ளார்.

ஜிப்மரை விரிவாக்கம் செய்ய ரூ.ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. உறுப்பு மாற்று சிகிச்சை மையம் அமைக்க ரூ.550 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் 4 ஆயிரத்து 399 நாள் ஆட்சியில் நம்பிக்கை, வளர்ச்சி, மக்களின் நலன் அடிப்படையில் சிறப்பான ஆட்சி நடந்துள்ளது. 2047ல் வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்க தீவிரமாக பணிகள் நடந்து வருகிறது.

By admin