• Sat. Jun 13th, 2026

24×7 Live News

Apdin News

ரூ.370 பிரியாணி சர்ச்சை: பிரனித் மோர் நிகழ்ச்சியின் வைரல் வீடியோ எதை உணர்த்துகிறது?

Byadmin

Jun 13, 2026


ரூ.370 பிரியாணி சர்ச்சை - பிரனித் மோரின் நகைச்சுவை நிகழ்ச்சி பிரதிபலிப்பது என்ன?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மிருதுலிகா ஜா
    • பதவி, பிபிசி செய்தியாளர்
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

குருகிராம் இளைஞர் ஒருவர் டேட்டிங்குக்காக 370 ரூபாய் செலவழித்த பிறகு, அதற்குப் பதிலாக ‘திரும்பப் பெறுவதை’ எதிர்பார்ப்பது குறித்த நகைச்சுவை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்டாண்ட்-அப் நகைச்சுவைக் கலைஞர் பிரனித் மோரின் நிகழ்ச்சியில், ஹிமான்ஷு ஜங்ரா என்ற இளைஞர் ஒருவர், தான் ஒரு பெண்ணுடன் டேட் சென்றபோது பிரியாணிக்காக 370 ரூபாய் செலவிட்டதாகக் கூறினார். அதற்கு பிரதிபலனாக, அவர் பாலியல் ரீதியான இன்பங்களை நாடியதுடன், அந்தப் பெண் தயக்கம் காட்டிய போதிலும் அவர் மீது ஆதிக்கம் செலுத்த முயன்றதாக தெரிவித்தார்.

நிகழ்ச்சித் தொகுப்பாளர் அவரது ஆபாசமான நகைச்சுவையை உடனடியாக தடுத்து நிறுத்துவதற்குப் பதிலாக, அதைச் சிரித்து ஊக்குவித்தார்.

விரைவில் அந்த நிகழ்ச்சியின் காணொளி இணையத்தில் பரவலாகப் பகிரப்பட்டது; இணையத்தில் அதிகமானோரை ஈர்ப்பதற்காக மட்டுமே, பெண்களுக்கு எதிரான ஆட்சேபனைக்குரிய கருத்துகளை நகைச்சுவையாக முன்வைக்கலாமா என்று மக்கள் அதிருப்தி அடைந்தனர்.

என்ன சர்ச்சை?

“நாங்கள் இருவரும் 370 ரூபாய் பிரியாணி சாப்பிட்டோம். பிறகு அவர், ‘என்னை வீட்டில் விட்டுவிடு’ என்றார். நான், ‘அந்த 370 ரூபாய் செலவாகிவிட்டாலும், அதை நான் கண்டிப்பாகத் திரும்ப எடுத்துவிடுவேன்’ என்று சொன்னேன்.”

By admin