நடிகராக மட்டுமில்லாமல் இயக்குநராகவும் திறமையை வெளிப்படுத்தி, ரசிகர்களின் அன்பை பெற்றிருக்கும் நடிகர் தனுஷ் இயக்கத்தில் உருவாகவிருக்கும் புதிய திரைப்படத்திற்கு, ‘இட்லி கடை’ என பெயரிடப்பட்டு, அதற்கான டைட்டில் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டிருக்கிறது.
‘ப. பாண்டி’, ‘ராயன்’ விரைவில் வெளியாகவிருக்கும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ ஆகிய படங்களை தொடர்ந்து இயக்குநர் தனுஷ் இயக்கத்தில் உருவாகும் ‘இட்லி கடை’ எனும் திரைப்படத்தில் தனுஷ் முதன்மையான வேடத்தில் நடிக்கிறார். கிரண் கௌசிக் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். எளிய மக்களின் வாழ்வியலை அழுத்தமாக பதிவு செய்யும் இந்த திரைப்படத்தை டௌன் பிக்சர்ஸ் மற்றும் வுண்டர்பார் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தனுஷ் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.
தனுஷின் நடிப்பில் உருவாகும் 52 ஆவது படமாகவும், அவரது இயக்கத்தில் தயாராகும் நான்காவது படமாகவும் இது இருப்பதாலும்… படத்திற்கு ‘இட்லி கடை’ என பெயரிடப்பட்டிருப்பதாலும்… ரசிகர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது. மேலும் இதற்காக வெளியிடப்பட்ட போஸ்டர் வண்ணங்களால் தீட்டப்பட்ட ஓவியம் போல் இருப்பதாலும் இணையவாசிகளின் பாராட்டை குவித்து வருகிறது.
The post ‘இட்லி கடை’யை தொடங்கியிருக்கும் தனுஷ் appeared first on Vanakkam London.