• Wed. May 13th, 2026

24×7 Live News

Apdin News

இந்தியாவில் தங்கம், வெள்ளி இறக்குமதி வரி உயர்வு ஏன்? நகை விலை எவ்வளவு அதிகரிக்கும்?

Byadmin

May 13, 2026


தங்கம்

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இந்தியா தங்கம் மற்றும் வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு புதன்கிழமை அறிவிப்பை வெளியிட்டது.

வெளிநாடுகளில் இருந்து விலையுயர்ந்த உலோகங்களை வாங்குவதைக் குறைக்கவும், நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு மீதான அழுத்தத்தைக் குறைக்கவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறைந்தது ஒரு வருடத்திற்காவது தங்க நகைகளை வாங்க வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோதி சமீபத்தில் நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

“தங்கம் வாங்குவது என்பது அதிக அந்நியச் செலாவணியை நுகரும் மற்றொரு அம்சமாகும். நாட்டின் நலன் கருதி, ஒரு வருடம் முழுவதும் வீட்டில் ஏதேனும் விழாக்கள் நடந்தால், நாம் தங்க நகைகளை வாங்க மாட்டோம் என்று முடிவு செய்ய வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.

மேலும், “நாம் அந்நியச் செலாவணியைச் சேமிக்க வேண்டும்” என்று அவர் கூறியிருந்தார்.

By admin