• Tue. Jun 16th, 2026

24×7 Live News

Apdin News

இந்திய தூதருக்கு சம்மன் அனுப்பி கோபத்தை வெளிப்படுத்திய வங்கதேசம் – என்ன நடந்தது?

Byadmin

Jun 16, 2026


 ஜாஹித் உர் ரஹ்மான்

பட மூலாதாரம், https://www.facebook.com/zahed.urrahman.77

படக்குறிப்பு, வங்கதேசப் பிரதமரின் ஆலோசகர் ஜாஹித் உர் ரஹ்மான் (கோப்புப் படம்)

    • எழுதியவர், ரகிப் ஹஸ்னத்
    • பதவி, பிபிசி வங்கமொழி சேவை
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மானின் ஆலோசகர் ஜாஹித் உர் ரஹ்மான், டெல்லி விமான நிலையத்தில் குடிவரவு தொடர்பான “பிரச்னைகளை” எதிர்கொண்ட பிறகு தனது நாட்டுக்குத் திரும்பினார்.

இந்தச் சம்பவம் குறித்து வங்கதேச வெளியுறவு அமைச்சர் கலீலுர் ரஹ்மான் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார்.

இதுகுறித்துப் பேசிய அவர், “இது எதிர்பாராத ஒரு சம்பவம். துரதிருஷ்டவசமானதும் கூட. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் தகுந்த நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றார்.

திங்கட்கிழமை மதியம் ஊடகங்களுடனான சந்திப்பின்போது வெளியுறவு அமைச்சர் இந்த கருத்துக்களைத் தெரிவித்தார்.

பின்னர், அன்று பிற்பகல், டாக்காவில் உள்ள இந்திய உயர் ஆணையகத்தின் தூதரான பவன் குமார் பாதேவை வங்கதேச வெளியுறவு அமைச்சகம் அழைத்தது.

By admin