• Fri. Jun 26th, 2026

24×7 Live News

Apdin News

இந்திய பாஸ்போர்ட் குடியுரிமைக்கான சான்று இல்லையா? கேள்வி எழுவது ஏன்?

Byadmin

Jun 25, 2026


இந்திய பாஸ்போர்ட் என்பது ஒரு பயண ஆவணம் மட்டுமே தவிர, அது குடியுரிமைக்கான இறுதிச் சான்றிதழ் அல்ல என்ற செய்தி புதன்கிழமை மாலை முதல் இந்திய ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாஸ்போர்ட் பொதுவாக குடியுரிமைக்கான சான்றாகக் கருதப்படுகிறது.

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

இந்திய பாஸ்போர்ட் என்பது ஒரு பயண ஆவணம் மட்டுமே தவிர, அது குடியுரிமைக்கான இறுதிச் சான்றிதழ் அல்ல என்ற செய்தி புதன்கிழமை மாலை முதல் இந்திய ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி, பல இந்திய ஊடகங்கள் இந்தச் செய்தியை வெளியிட்டு வருகின்றன.

“இந்திய பாஸ்போர்ட்டின் நோக்கம் மக்கள் வெளிநாட்டுத் துறைமுகங்களுக்கும் பிரதேசங்களுக்கும் பயணம் செய்ய உதவுவதே ஆகும். எனவே, அதனை குடியுரிமை உரிமைகளை நிலைநாட்டப் பயன்படுத்தப்படும் ஆவணங்களுடன் ஒப்பிடக்கூடாது ” என்று வெளியுறவு அமைச்சக அதிகாரி கூறியதாக ‘தி இந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.

இந்துஸ்தான் டைம்ஸ் செய்தியின் படி , “இந்திய தொழிலாளர்களை உலகளாவிய பொருளாதாரத்துடன் இணைப்பதில் பாஸ்போர்ட்டின் பங்கை வலியுறுத்திய வெளியுறவு அமைச்சக அதிகாரிகள், வரும் மாதங்களில் மேற்கத்திய நாடுகள் மற்றும் ஜப்பானுடனான பரிமாற்றங்களை அரசாங்கம் மேலும் துரிதப்படுத்தும் என்று கூறினர்.

இந்த தொழில்மயமான பொருளாதாரங்களில் இந்தியக் குடிமக்களுக்குப் பாதுகாப்பான வேலைவாய்ப்புக்கான சிறந்த வாய்ப்புகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.”

By admin