• Tue. Sep 8th, 2026

24×7 Live News

Apdin News

இன்ஸ்டாகிராம் கிரியேட்டர்களை குறிவைக்கும் ‘காப்புரிமை மோசடி’ – கணக்கை முடக்கி பணம் பறிப்பது எப்படி?

Byadmin

Sep 8, 2026


இன்ஸ்டாகிராம் கிரியேட்டர்களை குறிவைக்கும் 'காப்புரிமை மோசடி' - கணக்கை முடக்கி பணம் பறிப்பது எப்படி?

பட மூலாதாரம், Reuters

    • எழுதியவர், இம்ரான் ரஹ்மான்-ஜோன்ஸ்
    • பதவி, பிபிசி
  • பிரசுரிக்கப்பட்டது

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

போலியான காப்புரிமை புகார்கள் காரணமாக தங்களது இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டதாகவோ, நீக்கப்பட்டதாகவோ கூறும் கிரியேட்டர்கள், இதனால் ஆயிரக்கணக்கான பவுண்டுகளை இழந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.

மெட்டாவுக்குச் சொந்தமான சமூக ஊடகத் தளத்தில் சிலர் போலியான காப்புரிமை புகார்களை பதிவு செய்து, பின்னர் அவற்றைத் திரும்பப் பெற பணம் கேட்டு மிரட்டுகின்றனர். தொடர்ந்து இதுபோன்ற காப்புரிமை புகார் பதிவு செய்யப்பட்டால் கணக்குகள் முடக்கப்படலாம் என்பதை அவர்கள் அறிந்தே இதைச் செய்வதாகக் கூறப்படுகிறது.

15 லட்சம் பின்தொடர்பாளர்களைக் கொண்ட ஓர் இன்ஸ்டாகிராம் பயனர், தனது கணக்கை மீண்டும் பெறுவதற்காக மோசடி செய்த ஒருவருக்கு 50 டாலர் கொடுத்ததாக பிபிசியிடம் தெரிவித்தார். மெட்டாவின் மேல்முறையீட்டு நடைமுறை பல வாரங்கள் ஆகும் என்று அந்த மோசடி நபர் கூறியதாகவும், இதற்கு முன்பு இதேபோன்ற நடவடிக்கையால் ஆயிரக்கணக்கான பவுண்டுகள் வருமானத்தை இழந்ததாகவும் அவர் தெரிவித்தார்.

“இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஏமாற்றத்தையும் விரக்தியையும் ஏற்படுத்தும் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதைத் தொடக்கத்திலேயே தடுக்கும் வகையில் எங்கள் அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன,” என்று மெட்டா செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார்.

“எங்கள் ஆய்வுக்குப் பிறகு, உள்ளடக்கத்தை மீண்டும் வழங்கியுள்ளோம். இதுபோன்ற முயற்சிகள் மீண்டும் நடைபெறாமல் கணக்குகளைப் பாதுகாக்க கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம்.”

By admin