• Tue. Sep 8th, 2026

24×7 Live News

Apdin News

சட்டப்பேரவையில் அவைக் காவலர்களால் வெளியேற்றப்பட்ட திமுக உறுப்பினர்கள் – நடந்தது என்ன?

Byadmin

Sep 8, 2026


தமிழக சட்டபேரவையில் இன்று (08-09-2026) அவைத் தலைவர் இருக்கையை சூழ்ந்துகொண்டு முழக்கமிட்ட திமுக உறுப்பினர்கள் அவைக்காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.

பட மூலாதாரம், Tamilnadu Assembly

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது

தமிழக சட்டப்பேரவையில் இன்று (08-09-2026) அவைத் தலைவர் இருக்கையைச் சூழ்ந்துகொண்டு முழக்கமிட்ட திமுக உறுப்பினர்கள், அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்றப்பட்டனர்.

சட்டப்பேரவை நடவடிக்கைகள் தொடங்கியவுடன், திமுக கொறடா எ.வ. வேலு பாயிண்ட் ஆஃப் ஆர்டர் ஒன்றை எழுப்பினார்.

நேற்றைய அவை நடவடிக்கைகளின்போது, காவல்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்துக்கு பதிலளிக்கும்போது, சர்க்காரியா கமிஷன் அறிக்கை, மிசா கைது, அமலாக்கத்துறை ஆவணங்கள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளை அவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என எ.வ. வேலு வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார், அவையில் ஏற்கெனவே விவாதிக்கப்பட்ட சர்க்காரியா கமிஷன் அறிக்கையை மட்டுமே முதலமைச்சர் குறிப்பிட்டதாகவும், மிசா சட்டத்தின் கீழ் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதாக எந்தக் குறிப்பும் இல்லை என்றும் தெரிவித்தார்.

By admin