• Sun. Sep 22nd, 2024

24×7 Live News

Apdin News

இலங்கை ஜனாதிபதி தேர்தல்: தொடங்கியது வாக்கு எண்ணிக்கை – நாடு முழுக்க ஊரடங்கு அறிவிப்பு ஏன்?

Byadmin

Sep 21, 2024


இலங்கை ஜனாதிபதி தேர்தல்
படக்குறிப்பு, கொத்மலை – வேவன்டன் தமிழ் வித்தியாலயத்தில் வாக்குச்சாவடிக்கு வெளியே நீண்ட வரிசையில் வாக்காளர்கள்

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் வாக்குப் பதிவு நிறைவடைந்து, வாக்குகளை எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு மாலை 4 மணியுடன் நிறைவடைந்தது.

தலைநகர் கொழும்பு மற்றும் தமிழர் பகுதிகளிலும் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றது.

வாக்குப்பதிவு நிலவரம்

மாலை நான்கு மணி நிலவரப்படி, களுத்துறையில் 75%, காலி பகுதியில் 74%, வவுனியாவில் 72%, மன்னாரில் 72%, பதுளையில் 73%, ஹம்பன்தோட்டாவில் 78%, கேகாலையில் 75%, அனுராதபுரத்தில் 75%, மட்டக்களப்பில் 69% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது.

By admin