• Mon. Sep 30th, 2024

24×7 Live News

Apdin News

உத்தர பிரதேசத்தில் பள்ளி மாணவரின் கொலை, பலி கொடுப்பதுடன் இணைக்கப்படுவது ஏன்?-பிபிசி கள ஆய்வு

Byadmin

Sep 30, 2024


கிராமத்திற்கு வெளியே இருக்கும் இந்தப்பள்ளியில் மாணவன் ஒருவர் பலி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது
படக்குறிப்பு, கிராமத்திற்கு வெளியே இருக்கும் இந்தப் பள்ளியில் மாணவர் ஒருவர் பலி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ஹாத்ரஸின் ரஸ்கவான் கிராமத்தில் இருந்து அரை கிலோமீட்டர் தொலைவில், நெல் மற்றும் தினை வயல்களுக்கு மத்தியில் அமைந்துள்ள டிஎல் பப்ளிக் ஸ்கூலின் தங்கும் விடுதியில் தங்கியிருந்த 11 வயது சிறுவன் பலி கொடுக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

பள்ளிக்கூடத்தின் கதவுகள் பூட்டப்பட்டுள்ளன. பெயர் பலகை கிழிந்துள்ளது. வெளியே பள்ளி மேலாளர் மற்றும் மாவட்ட அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் பெரிய எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன.

இந்த ஆங்கில மீடியம் பள்ளியில் ஒரு மாணவர் ‘பலி’ கொடுக்கபட்டதாகக் கூறப்படுவதை, பள்ளிக்கு வெளியே நிற்கும் ஊர் மக்கள் பலர் நம்பத் தயாராக இல்லை.

பள்ளி விடுதியில் தங்கியிருந்த 11 வயது கிருதார்த் குஷ்வாஹா செப்டம்பர் 22-23-ஆம் தேதிக்கு இடைப்பட்ட இரவில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார்.

By admin