• Tue. Jul 28th, 2026

24×7 Live News

Apdin News

‘உறுதிமொழியை அரசு மீறுகிறது’ – சிஜேபியின் புதிய குற்றச்சாட்டுகள் என்ன?

Byadmin

Jul 28, 2026


காக்ரோச் ஜனதா கட்சி

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தைத் தொடர்ந்து நடைபெற்ற போராட்டங்கள் முடிவடைந்த பிறகு, காக்ரோச் ஜனதா கட்சி (சிஜேபி) திங்கள்கிழமை தனது முதல் செய்தியாளர் சந்திப்பை நடத்தியது. அந்தச் சந்திப்பில், போராட்டங்கள் முடிந்த பிறகும் மாணவர்கள் காவல்துறையினரால் குறிவைக்கப்படுவதாக சிஜேபி குற்றம்சாட்டியது.

சிஜேபி செய்தித் தொடர்பாளர் சௌரவ் தாஸ் மற்றும் பிற நிர்வாகிகள், வழக்கறிஞரும் மாநிலங்களவை உறுப்பினருமான கபில் சிபலுடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்றனர்.

போராட்டக்காரர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்கப்படாது என்ற உறுதியை மத்திய அரசு மீறி வருவதாக சிஜேபி குற்றம்சாட்டியுள்ளது.

இதற்கிடையில், காங்கிரஸின் மாணவர் அமைப்பான என்.எஸ்.யு.ஐ, டெல்லி மற்றும் பிகாரில் மாணவர்கள் அடையாளம் காணப்பட்டு குறிவைக்கப்படுவதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளது.

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்திற்குப் பிறகு, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானின் ராஜிநாமாவை வலியுறுத்தி சிஜேபி தொடர்ந்து போராட்டம் நடத்தி வந்தது.

By admin