• Tue. Jun 16th, 2026

24×7 Live News

Apdin News

உலகக்கோப்பை கால்பந்து 1950: இந்தியா வாய்ப்பு கிடைத்தும் பங்கேற்காதது ஏன்? ஒரு வரலாற்று பார்வை

Byadmin

Jun 16, 2026


ஃபிஃபா 2026, உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள், விளையாட்டு, இந்தியா

பட மூலாதாரம், ullstein bild Dtl./Getty Images

படக்குறிப்பு, மூன்று நாடுகளில் உள்ள 16 நகரங்களில் நடைபெறும் 104 ஆட்டங்களுக்குப் பிறகு, உலகக் கோப்பையின் மன்னனாக முடிசூட்டப்படப் போவது யார் என்பதை உலகம் அறியவிருக்கிறது. (கோப்புப் படம்)

2026-ஆம் ஆண்டுக்கான ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ஜூன் 11 முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஜூன் 11 முதல் ஜூலை 19 வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளை வரலாற்றிலேயே முதன்முறையாக, அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடா என மூன்று நாடுகள் கூட்டாக இணைந்து நடத்துகின்றன.

இந்த மூன்று நாடுகளின் 16 நகரங்களில் மொத்தம் 104 போட்டிகளின் முடிவில் உலகக் கோப்பையை வென்று மகுடம் சூடப்போவது யார் என்பது உலகிற்குத் தெரியும். இந்த போட்டிகள் அமெரிக்காவின் 11 நகரங்களிலும், மெக்சிகோவின் 3 நகரங்களிலும் மற்றும் கனடாவின் 2 நகரங்களிலும் நடைபெறவுள்ளன.

இந்தத் தொடரை நடத்துவதன் மூலம், உலகக் கோப்பையை மூன்று முறை நடத்தும் உலகின் முதல் நாடு என்ற பெருமையை மெக்சிகோ பெறுகிறது. இதற்கு முன்பு 1970 மற்றும் 1986 ஆகிய ஆண்டுகளில் உலகக் கோப்பை போட்டிகளை மெக்சிகோ நடத்தியுள்ளது.

கால்பந்து உலகின் மகுடத்திற்கான இந்தக் கடுமையான மோதலில், உலகெங்கிலும் இருந்து 48 அணிகள் பங்கேற்பது இதுவே முதல் முறையாகும். இதற்கு முந்தைய ஏழு உலகக் கோப்பை போட்டிகளில், உலகின் சிறந்த 32 அணிகள் மட்டுமே பங்கேற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

அதாவது, இந்த முறை உலகம் முழுவதிலுமிருந்து மேலும் 16 நாடுகளுக்கு உலகக் கோப்பையில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைக்கிறது. கடந்த உலகக் கோப்பையின் 64 போட்டிகளுடன் ஒப்பிடும்போது, இந்த முறை அதிக போட்டிகள் விளையாடப்படுகின்றன.

By admin