• Tue. Jun 16th, 2026

24×7 Live News

Apdin News

பாலியல் துன்புறத்தல் வழக்கில் கால்பந்து வீரருக்கு 8.5 ஆண்டுகள் சிறை – நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Byadmin

Jun 16, 2026


ஸ்பெயின் கால்பந்து வீரர் ரஃபா மிர், மற்றொரு வீரருடன் சேர்ந்து இரண்டு பெண்களை பாலியல் ரீதியாக துன்புறுத்திய குற்றத்திற்காக, 8.5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து ஸ்பெயின் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வலென்சியா பிராந்தியத்தில் உள்ள ஒரு கீழ் நீதிமன்றம் நேற்று (திங்கள் கிழமை) வழங்கிய தீர்ப்பில், மிர் மற்றும் மற்றொரு வீரர், 2024-ஆம் ஆண்டில் வலென்சியா நகரில் உள்ள மிர்ரின் வீட்டில் இரண்டு பெண்களையும் பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளனர்; அந்த நேரத்தில் அவர் அதே பெயரை கொண்ட கால்பந்து கிளப்பிற்காக விளையாடி வந்தார்.

By admin