கடலூர் / மயிலாடுதுறை: எனது வீட்டில் அதிநவீன ஒட்டு கேட்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறினார். கடலூர் மேற்கு மாவட்ட பாமக செயற்குழுக் கூட்டம் விருத்தாசலத்தில் நேற்று நடைபெற்றது.
இதில் ராமதாஸ் பேசியதாவது: மாநில பொதுக்குழுக் கூட்டத்தில் 2,700 பேர் கலந்துகொண்டனர். என்எல்சி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்து பாதிக்கப்பட்டோருக்காக பாமக தொடர்ந்து போராடியும், என்எல்சி நிறுவனம் செவிசாய்க்கவில்லை. எங்கள் போராட்டம் தொடரும். 10.5 சதவீத இடஒதுக்கீட்டைப் பெற, உங்களிடம் உள்ள விலைமதிப்பற்ற ஆயுதமான வாக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.