• Wed. May 13th, 2026

24×7 Live News

Apdin News

எரிபொருளை சேமிக்குமாறு மோதி வேண்டுகோள் விடுத்த பிறகு பெட்ரோலிய அமைச்சகம் கூறியது என்ன?

Byadmin

May 13, 2026


பிரதமர் நரேந்திர மோதி பொதுமக்களிடம் பணத்தைச் சேமிக்குமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.

பட மூலாதாரம், AFP via Getty Images

வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரதமர் நரேந்திர மோதி, ஓராண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என்றும் சமையல் எண்ணெயை குறைவாக பயன்படுத்துமாறும் மக்களிடம் கேட்டுக்கொண்டார். இந்நிலையில், பெட்ரோலிய துறை அமைச்சகம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்களின் கையிருப்பு குறித்த தகவல்களை வழங்கியுள்ளது.

பெட்ரோலிய துறையின் இணை செயலாளர் சுஜாதா ஷர்மா செய்தியாளர் சந்திப்பில், “நமது சுத்திகரிப்பு நிலையங்கள் சிறப்பான திறனுடன் செயல்பட்டு வருகின்றனர்” என்றார்.

மேலும் அவர், “போதுமான பெட்ரோல் மற்றும் டீசல் கையிருப்பில் உள்ளன. வீட்டுத் தேவைகளுக்கான எல்பிஜி விநியோகம் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.” எனவும் தெரிவித்தார்.

மேலும், மத்திய கிழக்கில் நிலவும் சூழல் குறித்து, திங்கட்கிழமை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பல்வேறு அமைச்சகங்கள் அடங்கிய கூட்டத்துக்கு தலைமை வகித்தார். அந்த கூட்டத்தை தொடர்ந்து, நாட்டில் போதுமான எரிபொருள் கையிருப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோதி தெலங்கானா சென்றிருந்தபோது, அங்கு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது, இரான் போர் தொடர்பான சர்வதேச பிரச்னைகள் குறித்து அவர் பேசினார்.

By admin